இன்றைய ராசி பலன்! 10 .10.2019
புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
10.10.2019 புரட்டாதி மாதம் 23 ஆம் நாள் வியாழக்கிழமையாகும். துவாதசி முன் இரவு 9.15 வரை சதயம், மரண பின் இரவு 4.16 வரையாகும். சுப நேரம் காலை 7.32 – 9.02 வரையாகும். எமகண்டம் மாலை 6.02 – 7.32 வரையாகும். இராகுகாலம் மதியம் 1.32 – 3.02 வரையாகும். குளிகன் காலை 9.02 – 10.32 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய வீடு வாங்குவீங்கள். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். இன்றைய நாள் மரியாதை பெருகும் நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: நீங்கள் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடிமாற்றம் செய்து இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். திடீர் பயணங்கள் ஏற்படும். இன்றைய நாள் முயற்சிகள் வெற்றி அடையும் நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவீங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையைமுழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள்சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சாதுரியமான செயலால் காரிய வெற்றி பெறுவீர்கள். இன்றைய நாள் சகிப்புத்தன்மை தேவைப்படும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் தேவைகளைப்பூர்த்தி செய்வீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். குடும்ப விஷயங்களில் விட்டு கொடுத்து போவது நல்லது. உறவினர்களுக்கு அன்பு கரம் நீட்டுவீர்கள். உடல் உபாதைகள் நீங்கும். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு இலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புதிய வாகனம் வாங்குவீங்கள். குடும்பத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது சிறப்பு. தம்பதியினருக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
துலாராசி உறவுகளே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம்உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீங்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:. திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்ப பொருளாதார நிலை உயரும். உறவினர்களிடம் இருந்து வந்த விரோதம் மறையும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விஷேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பண சேமிம்பில் கவனம் செலுத்தவும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: உங்கள் ராசியில் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும்,நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். தம்பதியினருக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
மீன ராசி நேயர்களே: நீங்கள் வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். குடும்பத்தில் பல புதுமைகளை நிகழ்த்த முடியும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். முன் கோபத்தை குறைத்து கொள்ளவும். பழைய கடனை திருப்பி கொடுப்பீங்கள். இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.