இன்றைய ராசி பலன்! 15.11.2019
புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
15.11.2019 ஐப்பசி மாதம் 29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். திருதியை முன் இரவு 8.09 வரை மிருகசீரிடம் முன் இரவு 11.56 வரையாகும். சுப நேரம் காலை 6.07 – 7.37 வரையாகும். எமகண்டம் மதியம் 3.07 – 4.37 வரையாகும். இராகுகாலம் காலை 10.37 – 12.07 வரையாகும். குளிகன் காலை 7.37 – 9.07 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: நீங்கள் துணிச்சலான சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கரை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். புது வீடு எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திடீர் பயணம் ஏற்படும். பிறர் நலனில் அதிக அக்கறைகொள்வீர்கள். சுற்றி உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: தம்பதியினருக்கு இடையில் மனவிட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து காணப்படும். உடல் நலம் மேம்படும். வெளியிடங்களில் நிதானமாக பேசுவதும், பழகுவதும் நன்மை தரும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் தவிருங்கள். உத்தியோகத்தில் அதிக இலாபம் ஏற்படும். வாகனங்களில் செல்லும் கவனமாக செல்ல வேண்டும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் நாவடக்கம் தேவைப்படும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவுத் தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து இலாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தம்பதியினருக்கு இடையில் நல்ல ஒற்றுமை இருக்கும். உங்கள் திறமைக்குத் தகுந்த வெகுமதி கிடைக்கும். இன்றைய நாள் அலைச்சல் தரும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்கள் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்திற்கு புது இடத்தை மாற்றுவீர்கள். குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வது நல்லது. எதிரிகள் விலகி நிற்பர். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றிக் காண்பீர்கள். இன்றைய நாள் பாராட்டுப் பெறும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழையபாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புக்கள் வரும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். இன்றைய நாள் மனசாட்சிபடி செயல்படும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்ந்து கொண்டு இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பிஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும். எந்த ஒரு காரித்தையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். இன்றைய நாள் வளைந்து கொடுக்க வேண்டிய நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உடன் பிறந்தவர்கள் வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீங்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். குடும்ப வரவு செலவு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவாரகள். வியாபாரத்தில் இரட்டிப்பு இலாபம் உண்டு. பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். புதிய வாகனம் வாங்க வேண்டி வரும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: உங்கள் எதிர்காலத்தை குறித்து சிந்திப்பீங்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டு. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பீங்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
மீன ராசி நேயர்களே: பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பழைய கடனை தீர்க்க புது வழிகளை யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். மற்றவர்களுக்கு உதவி செய்வீங்கள். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும் நாளாகும்.