இன்றைய ராசி பலன்! 22.02.2020
புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
22.02.2020 மாசி மாதம் 10 ஆம் நாள் சனிக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். சதுர்த்தசி முன் இரவு 7.50 வரை திருவோணம் பின் பகல் 12.14 வரையாகும். சுப நேரம் மதியம் 3.31 – 5.01 வரையாகும். இராகுகாலம் காலை 9.31 – 11.01 வரையாகும். எமகண்டம் மதியம் 2.01 – 3.31 வரையாகும். குளிகன் காலை 6.31 – 8.01 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. குடும்பத்தில் அனுசரணை அதிகம் தேவை. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சிலருக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். திடீர் பயணத்தால் உடல் அசதி உண்டாகும். வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: தாய் வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்ட நாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.
கடக ராசி நேயர்களே: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திடீர் செலவுகளும் ஏற்படக் கூடும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வாழ்க்கைத் துணைவழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். கடன் பிரச்சனை தலைதூக்கும். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: புதிய முயற்சி சாதகமாக முடியும். தடைப்பட்டு வந்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும் . அரச அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். இன்றைய நாள் புகழ் பெறும் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வீடு வாங்குவீங்கள். குடும்ப தேவைகள் அதிகமாகும். பெற்றோர்களிடம் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். மனதில் இருந்த குழப்ப நிலை நீங்கும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: மனதில் வீண் குழப்பங்கள் தோன்றி மறையும்.ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்கள். தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் கூடும். தம்பதியினருக்கு இடையில் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்ப வாழ்வில் சில நெருக்கடிகள் வரலாம். தியானம் மன நிம்மதியை தரும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் முன் கோபத்தைக் குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.கடனை திருப்பி செலுத்துவீங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். சந்தர்ப்ப சூழ்நிலையைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ளவும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். இன்றைய நாள் தடைகள் உடைபடும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: உங்கள் ராசியில் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். தம்பதியினருக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் மறைமுகப் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் அறிந்து செயல்பட வேண்டிய நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: தம்பதியினருக்கு இடையில் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். சிலர் கடன் வாங்கவும் கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். விபத்தில் அதிக இலாபம் கிடைக்கும். பிள்ளைகளால் முகத்தில் அந்தஸ் கூடும். இன்றைய நாள் எதிலும் கவனம் தேவைப்படும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். ஊதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.