இன்றைய ராசி பலன்! 06.04.2020
புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
06.04.2020 பங்குனி மாதம் 24 ஆம் நாள் திங்கட்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். திரயோதசி பின் பகல் 1.39 வரை பூரம் முன் பகல் 9.58 வரையாகும். சுப நேரம் மதியம் 12.08 – 1.38 வரையாகும். எமகண்டம் காலை 10.38 – 12.08 வரையாகும். குளிகன் மதியம் 1.38 – 3.08 வரையாகும். இராகுகாலம் காலை 7.38 – 9.08 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: உங்கள் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட் டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் எதிர்பார்ப்புகள் அதிகமாகும். திருமணத்தில் இருந்த தடை நீங்கும். மனதில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை அமையும். வெளிவட்டாரத் தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார் கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். புது நபர்களிடம் எச்சரிக்கையாக பழகவும். எதிர்பார்த்த பணம் வர தாமதமாகும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: நீங்கள் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து பிரச்சினை சுமூகமாகதீரும். வியாபாரத்தில் இரட்டிப்பு இலாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். இன்றைய நாள் வெற்றிபெறும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். டும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: உங்கள் ராசியில் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண் டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். புண்ணிய காரியங்களுக்குப் பொருளுதவி செய்வீர்கள். மனதில் உள்ள குழப்ப நிலை மாறும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர். இன்றைய நாள் சிந்தித்து செயல் படவேண்டிய நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: உங்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். திட்டமிட்ட காரியங்களை உடனுக்குடன் செய்ய முடியும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.
துலாராசி உறவுகளே :குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரும். பெற்றோர்களிடம் சிறிய மனஸ்தாபம் ஏற்படும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். இன்றைய நாள் புகழ் கௌரவம் கூடும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே: நீங்கள் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ஆதரிப்பார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். அடுத்தவர்களிடம் உதவி கேட்ட தயக்கம் ஏற்படும். அடிக்கடி பயணங்களை தவிர்க்கவும். இன்றைய நாள் சிந்தனைத்திறன் பெருகும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனை பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல்லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சேமித்து வைத்த பணம் தக்க சமயத்தில் உதவும்.இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
மகர ராசி காரர்களே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நண்பர்களுடன் நெருடல்கள் வந்துநீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார். குடும்ப பெருமையை உயர்த்த முடியும். எதிலும் அவசரப்படமால் பொறுமையாக செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளவும். இன்றைய நாள் கவனம் தேவைப்படும் நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சொந்த பந்தங்களால் சில சங்கடங்கள் வரும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: குடும்ப ஒற்றுமை பலப்படும். நண்பர்கள் ஆதரவு பெருகும். தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பெரிய முதலீட்டை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.