இன்றைய ராசி பலன்! 10 .09.2019
புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
10.09.2019 ஆவணி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். துவாதசி பின் இரவு 4.39 வரை உத்தராடம் பின் பகல் 2.19 வரையாகும். சுப நேரம் காலை 10.33 – 12.03 வரையாகும். இராகுகாலம் மதியம் 3.03 – 4.33 வரையாகும். எமகண்டம் காலை 9.03 – 10.33 வரையாகும். குளிகன் மதியம் 12.03 – 1.33 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்து ழைப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புதிய வீடு வாங்குவீங்கள். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.
.
ரிஷப ராசி அன்பர்களே: தம்பதியினருக்கு இடையில் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர் உதவுவார்கள். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் மனசாட்சிப்படி செயல்படும் நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் நினைத்த வேகத்தில் சிலவேலைகளை முடிக்கமுடியாமல் தடை, தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட் களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். திடீர் நாட்பு கிடைக்கும். பழைய கடனை திருப்பி கொடுப்பீங்கள். தாயாரின் உடல் நிலையில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதியவர்கள் நட்பால் பண உதவி கிடைக்கும். சகோதரர்கள் வகையில் மனஸ்தாபம் வரும். இன்றைய நாள் நினைத்த காரியம் நிறைவு பெறும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமண யோகம் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றம் ஏற்படும். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: உங்கள் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீங்கள். பிரச்சனையை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் உண்டாகும். இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். வியாபாரம் சூடு பிடிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பழைய கடனை வட்டியோடு திருப்பி செலுத்துவீங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இலாபம் ஏற்படும். தாயின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவீங்கள். நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். தேவைக்கு ஏற்ப பணம் வந்து கொண்டிருக்கும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஓரளவு இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தாயாருடன் மோதல் ஏற்படும். தம்பதியினருக்கு இடையில் அன்பு, நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பழைய பிரச்சினை நல்ல முறையில் தீரும். இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். கோபத்தை உறைத்து வாழ்வில் முன்னேறுவீங்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். காதல் திருமணம் கைகூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். திடீர் பயணத்தால் நன்மை உண்டாகும். சமூகத்தில் அந்தஸ் கூடும். புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் நிம்மதியான நாளாகும்.
மகர ராசி காரர்களே: உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கோபத்தால் பகை உண்டாகும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை பலப்படும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள். மனதை மகிழ்விக்கும் சம்பவம் ஒன்று நடக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். இன்றைய நாள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: உங்கள் கோபத்தை குறைத்து வாழ்வில் உயர வழிகளை தேடுவீங்கள். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஓரளவு இலாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். திடீர் பயணத்தால் சோர்வு ஏற்படும். புதிய வாகனம் வாங்க நேரிடும். இன்றைய நாள் கடினமாக உழைக்க வேண்டிய நாளாகும்.
மீன ராசி நேயர்களே: திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். வியாபாரத்தில் புதிய இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புதிய வீடு வாங்குவீங்கள். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடி வரும். அடிக்கடி டென்ஷன் ஆகாமல் இருக்க பழகிக்கொள்ளவும். இன்றைய நாள் சிந்தனைத் திறன் பெருகும்நாளாகும்.