இன்றைய ராசி பலன்!21.01.2020
இன்றைய பஞ்சாங்கம்: 21-01-2020, தை 07, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 01.45 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. கேட்டை நட்சத்திரம் இரவு 11.43 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 11.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
சந்திராஷ்டமம் தொடர்வதால் பொறுமையாக இருப்பது நல்லது. செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர்கள் நண்பர் கள் மத்தியில் உங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடி யும்.
கடக ராசி நேயர்களே:
வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உடல்நிலையில் சிறிது பாதிப்பு வந்து நீங்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
பணப் பற்றாக்குறை இருந்தாலும் கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும்.தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும்.
கன்னி ராசி காரர்களே:
நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள்.
துலாராசி உறவுகளே:
முகத்தில் தெளிவு பிறக்கும்.உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவும் ஏற்படும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பயணத்தின்போது கவனம் தேவை. ம். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:
எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்வது நல்லது. தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.
மகர ராசி காரர்களே:
பெற்றோர் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.சுபகாரியம் கைகூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள்.
மீன ராசி நேயர்களே:
வீண் செலவுகளால் சேமிப்பு குறையும்.கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும்.மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும்.