வெள்ளைபடும் போது அதன் தன்மை எப்படி இருக்கிறது.? நாற்றம் வருகிறதா.!? வெள்ளைப் படுதல் நோயால் அவதிபடுவோருக்கு உடனடி தீர்வு இதோ..! உங்கள் வீட்டு பெண்களுக்காக பகிருங்கள் ..!!
மாதவிடாய் சுழற்சி நெருங்கும்போது வெள்ளைபடுதல் நோய் ஏற்படும். மாதவிலக்கு எவ்வாறு இயல்பாக பெண்களுக்கு ஏற்படுகின்றதோ அவ்வாறுதான் வெள்ளைபடுதலும் ஏற்படுகி்ன்றது. ஆனாலும் அது நீண்ட நாட்களுக்குத் தொடருமேயானால் அது பெண்களின் இனப்பெருக்க உறுப்பைப் பாதிப்படையச் செய்யும்.
அதுமட்டுமல்லாமல் மொனோபஸ் காலப்பகுதி வரை வெள்ளை படுதல் நோயானது நீடித்தால் அது புற்றுநோய்க்குரிய அறிகுறியாகவு்ம் இருக்கலாம். னவே உடனே இதைக் குணப்புடுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு வெள்ளைபடுதல் நோய் உள்ள பெண்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
உணவில் அடிக்கடி பசலைக் கீரையைச் சேரத்து வந்தாலும் வெள்ளைபடுதலோடு வெட்டை நோயும் சரியாகும்.
வல்லாரைக் கீரையுடன் சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.நன்னாரி வேருடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அது நன்கு ஆறியதும் சிறிய பணங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவேண்டும்.நாவல்பழம் சாப்பிட்டு வர உடற்சூடு குறையும். வெள்ளைபடுதலோடு கற்பப்பைக் கோளாறுகளும் சரியாகும்.
வெள்ளைபடுதல் நோய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அன்னாசிப்பழத்தை தினமும் உண்டு வர வெள்ளைப்படுதல் பிரச்சினை நாளடைவில் குணமாகும்.
கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.