என்ன தான் படித்தாலும் குழந்தைகளுக்கு நினைவில் நிற்காமல் போய்விடுகிறதா.!? ஞாபக மறதி நீங்க இதோ உடனடி தீர்வு…!
தற்போது மக்களிடம் அதிகமாகி வருகின்ற ஓர் குறைபாடாக ஞாபகமின்மையைக் குறிப்பிடலாம். சிறுவர் முதல் பெரியோர்கள் வரையிலும் ஞாபக மறதியால் அவதிப்படுவதை காணலாம். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. எனினும் இதற்கான மருத்துவம் என்பது வெறும் உள ஆற்றுப்படுத்தல்கள், மனனப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் என்பனவாகவே அமைகின்றது. ஆனால் சித்தர்கள் இதற்கான தீர்வை அப்போதே கூறிச் சென்றுள்ளனர்.
சித்த மருத்துவத்தில் உணவே மருந்தாகின்றது. அவ்வகையில் ஞாபகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக ‘சூரணம்’ என்று சொல்லப்படுகின்ற ஒரு கலவையைத் தயார் செய்து தினசரி சில மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமும் அபார ஞாபக சக்தியும் கிடைக்கப்பெறும் என்று குறிப்பிடப்படுகின்றது.நாமே வீட்டில் அச் சூரணத்தைத் தயாரிக்கும் முறையைப் பார்ப்போமா…?பின்வரும் பொருட்களை அதில் குறிப்பிட்டுள்ள அளவுகளின்படி நாட்டு மருந்துக் கடைகளிலிருந்து பெற்றுக் கொள்ளுங்க.
வல்லாரை இலை – 70 -கிராம்
துளசி இலை – 70 -கிராம்
சுக்கு 35 -கிராம்
வசம்பு – 35 -கிராம்
கரி மஞ்சள் -35 -கிராம்
அதிமதுரம் -35 -கிராம்
கோஷ்டம் – 35 -கிராம்
ஓமம் – 35 -கிராம்
திப்பிலி – 35 -கிராம்
மர மஞ்சள் – 35 -கிராம்
சீரகம் – 35 -கிராம்
இந்துப்பு – 35 -கிராம்
இவற்றை வெய்யிலில் காயவைத்து உலர்த்தி உரலில் இட்டு இடித்து நன்கு சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனைக் காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.ஓரிரண்டு மாதங்களில் உங்களுக்கே இதன் வித்தியாசத்தை உணர முடியும். மறதி நீங்கும் அபார ஞாபக சக்தி பிறக்கும். மூளை களைப்படையாமல் பணியாற்ற முடியும்.