இயக்குனர் கே.பாலசந்தரால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப் படுத்தப் பட்டு, பில்ம் பேர் விருது உட்பட பல விருதுகளை அள்ளி சுஷாந்த் சிங் போல் 33 வயதில் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்.!
சுஷாந்தின் மரணம் பேசப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சுஷாந்தை போலவே தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் ஒருவர் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இதற்கான காரணம் இவர் இறந்து 6 வருடங்களின் பின் இவர் நடித்த திரைப்படம் வெளியாக இருப்பது தான். உதய் கிரண் 1980ம் ஆண்டில் பிறந்தார்.
தெலுங்கு சினிமாவில் சித்ரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரண்டாவது திரைப்படத்திலேயே பில்ம் பேர் விருதை வெற்றி பெற்றார். அதன் பின் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி பெற்றது. இவரை தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்கள் அறிமுகப் படுத்தினார்.
பொய் என்ற திரைப்படத்தில் கம்பன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின் வம்பு சண்டை, பெண் சிங்கம் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். 2000 ஆண்டு சினிமாவில் அறிமுகமான உதய் கிரண் 1 பில்ம் பேர் விருது உட்பட பல விருதுகளை அள்ளினார்.
2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். உச்சத்தில் இருந்த உதய் கிரணின் வாய்ப்புகளை வாரிசு நடிகர்கள் தட்டிப் பறிக்க ஆரம்பித்தனர். வாரிசு நடிகர்களால் பிரபல நிறுவனங்கள் உதயின் ஒப்பந்தகளை ரத்து செய்ததுடன் அவரை ஓரங்கட்ட ஆரம்பித்தது. இதனால் இவரது சில திரைப்படங்கள் இடை நிறுத்தப் பட்டது. மனம் உடைந்து போனார்,
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி 2014ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதன் பின் சுஷாந்த் போலவே கொண்டாடப் பட்டார். தற்போது உதய் கிரண் இறந்து 6 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இவர் நடித்து ரிலீஸாகாமல் போன “Chitram Cheppina Katha” என்ற தெலுங்கு திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது..!!