ஈரானிலிருந்து புறப்பட்ட விமானம் விபத்து; 170 பேர் சாவு!
ஈரான் தலைநகர் தெக்ரானிலிருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் – அமெரிக்காவுக்கிடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும், குறித்த விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில் 170 பேர் வரை உயிரிந்துள்ளனர் என பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.