உள் மூலம் மற்றும் வெளிமூலமா.? இதோ உடனடி மருத்துவம்.! இரண்டு நாளில் குணமாகிவிடும்.!!
நோய் இல்லாத வாழ்க்கை அமைந்து விட்டால் குடிசை வீட்டில் இருந்தாலும் அவனே கோடீஸ்வரன் என்பார்கள். எல்லோருக்கும் நோய் இல்லாத வாழ்க்கை அமைந்துவிடுவத்தில்லை, அதிலும் எண்ணிலடங்கா நோய்கள் என்னில் அடங்கிவிட்டது என சொல்லக் கூடியவர்களும் உண்டு. இன்று நாம் பார்க்கப் போவது மூல நோய்க்கான மருத்துவத்தை தான். மூல நோய்பற்றி பல முறை பேசிவிட்டதால் இன்று தீர்வு என்ன என்பதை பார்க்கலாம். இது இலகுவானது இயற்க்கையானதும் கூட.
இதற்கு தேவையானவை பால் ஒரு கப் மற்றும் 15 உலர் திராட்சை பழங்கள். இவற்றை கொண்டு எப்படி மருத்துவம் செய்வது? முதலில் ஒரு கப் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். அதில் 15 உலர் திராட்சையை போட்டு கொஞ்சம் கொதிக்க வைத்து இறக்கி மூடி வைத்துவிடுங்கள். உறங்கச் செல்வதற்கு முன் இதனை குடித்துவிட்டு உறங்குங்கள்..ஒரே நாளில் மூல நோயின் வலி குறைந்துவிடும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர மூல நோய் தொல்லை இருக்காது. ஆனால் இது நிரந்தர தீர்வு கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க மூன்று நாட்கள் இந்த மருத்துவத்தை பயன் படுத்துங்கள். இதற்கு தேவையானது. துத்திக் கீரை 15 இலைகளை கழுவி நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் மோர் எடுத்துக் கொள்ளுங்கள் மோரில் இரண்டு கரண்டி துக்கிக் கீரை கலந்து மிக்ஸ் செய்து சுவைகேற்ப உப்பு சேர்த்து இரவில் குடித்துவிட்டு உறங்குங்கள்.
காலை எழுந்ததுமே உங்களால் உணர முடியும். தொடர்ந்து மூன்று நாள் குடித்து விடுங்கள் போதும். பின் எப்போதுமே உங்களுக்கு உள்மூலமோ வெளிமூலமோ வரவே வராது. மலச்சிக்கல்,அதிக பாரம் தூக்கும் வேலை செய்பவர்கள், மற்றும் சூட்டினால் வரும் அத்தனை மூல நோய்களுக்குமே இது பயனுள்ளதாகும். முக்கிய குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் முதலாவதாக உள்ள பால், உலர் திராட்சை பானத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். !