இந்த செடி, காய் எல்லாம் உங்கள் ஊரில் இருக்கா.? மிஸ் பண்ணாதீங்க உடனே வீட்டுக்கு கொண்டு போங்க…ஏன் தெரியுமா இத படியுங்கள்..!!
அல்சர் என்பது இன்று பலரையும் பாடாய் படுத்துகின்ற பிரச்சனையாகும். அல்சர் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்வோம். எமது உடலின் உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகை புண்ணாகி காயங்கள் உருவாகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர் பலவிதமான தொந்தரவுகளுக்கு ஆளாகக்கூடும்.இந்த அல்சர் உருவாகுவதற்க்கு என்ன காரணம் என்று சிந்திப்போம்.
மன உளைச்சல், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், கார உணவுகள், இரசாயனம் கலந்த உணவுப் பொருட்களை உண்ணுவது போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக்கூடாது என்பதை கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
அல்சர் நோயினை குணப்படுத்த மருந்துகள் பாவிப்பதனை விட உணவு பழக்கத்தில் கவனமாக இருந்தாலே அல்சர் பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபடலாம்.வீதியோரங்களில் இருக்கும் விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை இரசாயன உணவுகள், காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலவைகள் கலந்த உணவு, பழைய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.
மற்றும் மது அருந்துதல் மிக முக்கியமான காரணமாகும்.என்ன சாப்பிட வேண்டும்?அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கை கீரை போன்றவற்றை சாப்பாட்டில் சேர்க்க வேண்டும்.தேங்காய்பால் சேர்த்த உணவுகள் அதிகமாய் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடல் புண்ணை மாற்றும் சக்தி கொண்டது.
கொத்தமல்லியை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி வெதுவெதுப்பாக தினமும் குடித்து வந்தால் வாய்புண்கள் குணமாகும்.பீட்ரூட் சாறில் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று அல்சர் குணமாகும்.வயிற்றுக்கு இதம் தரும் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், பப்பாளி ஜூஸ் போன்ற குளிர்மை கொடுக்கும் பானங்களை அருந்தலாம்.தினமும் 3-4 லீட்டர் தண்ணீர் குடித்துவர சுரக்கும் அமிலத்தினை நடுநிலையாக்குவதால் குடற்புண்கள் ஆறும்.