டெக்கான் குயின் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள்…!! இந்த சம்பவம் எங்கு நடந்தது தெரியுமா??
இந்தியாவில் பிரபலமான ரயில் சேவையில் ஒன்றான டெக்கான் குயின் ரயில் சேவையாகும். இந்த் சேவையானது புனே மற்றும் மும்பை நகரங்களுக்கு இடையியே செயல்படும் தொடருந்தாகும். இது தினமும் மாலை 3.30 மணிக்கு புறப்படும். இதன் பயணதூரம் 192 கிலோமீட்டராகும். புனே நகரம் அமைந்துள்ள டெக்கான் பீடபூமியினை நினைவுகூறும் வகையில் டெக்கான் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த வகையில் பிரபலியமான டெக்கான் குயின் ரயிலில் பயணம் மேற்கொண்ட சாகர் கலே என்ற பயணி ஒருவருக்கு ஒம்லேட் உணவு தட்டில் வைத்து கொடுக்கப்பட்டது. அப்போது அந்த தட்டில் புழுக்கள் இருந்ததை பார்த்து சாகர் அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே ஊழியர்களிடம் சாகர் கலே புகார் கொடுத்தார். அதனை தொடர்ந்து அவர்கள் சாகரிடம் அந்த உணவை தாருங்கள் உங்களுக்கு நாங்கள் வேறு உணவை கொடுக்கின்றோம் என கூறியுள்ளனர். அதற்கு எந்தவொரு பதிலும் கூறாமல் குறித்த உணவை புகைப்படம் எடுத்த சாகர் அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே துறையில் செய்தி தொடர்பாளர் மனோஜ் கூறுகையில் சாகர் கொடுத்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.