பிறந்த நாளுக்காக உடுப்பு எடுக்க கடைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்…!!
மந்துவில் மேற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது பிறந்த நாளுக்காக உடுப்பு எடுக்க கடைக்கு சென்று கொண்டிருந்த போது பரிதாபமாக தனது கையை இழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் மந்துவில் மேற்கில் நடைபெற்றது.
குறித்த இளைஞன் கடைக்கு சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்து இனந்தெரியாத நபர் ஒருவர் அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இந்த வாள்வெட்டு சம்பவத்தால் இளைஞனின் கை துண்டாடப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக இதுவரைக்கும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.