நடிகை வாணி போஜன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து உன் வாழ்க்கை நாசமாக போகிறது என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..! என்ன போட்டோ தெரியுமா?
இன்றைய காலத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அன்று திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வாய்ப்பு இல்லாமல் போன பின்பு தான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தனர், ஆனால் இன்று சீரியலில் நடித்தால் பெரிய திரைக்கு இலகுவில் சென்று விடலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவரது. அழகும் துடிப்பும் நிறைந்த வாணி போஜனை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது அதனால் தொடர்ந்து சீரியல்களில் நடித்து தள்ளினார். இந்த நிலையில் இவருக்கு அதிர்ஷ்டம் அடிக்க “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தில் மூலம் பெரிய திரையில் காலடி வைக்கிறார்.
அசோக் செல்வன் ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தி வாணி போஜனின் கதாபாத்திரம் அதிகம் பேசப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது. நடிகை வாணி போஜன் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பவர் பிஸியானவரின் ஒரு பதிவு ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளம் ஒன்றில் 1 மில்லியன் பேர் வாணி போஜனை பின் தொடர்கின்றனர். இதனை மகிழ்ச்சியுடன் வாணி பகிர்ந்துள்ளார். ஆனால் இவர் ஒருவரை கூட இது பின் தொடரவில்லை. இதை பார்த்த ரசிகர்கள் எந்த ஒரு நடிக நடிகருக்கும் இல்லாத தலைக்கனம் உங்களுக்கு இருக்கிறது இது நல்ல விடமல்ல என கூறிவருகின்றனர்..!!