ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள் என்பார்கள், அப்படி எல்லா நாட்டிலும் வீட்டிலும் ஏமாற்ற ஒருவர் இருந்துகொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் ஊர் பக்கங்களில் உள்ளவர்கள் இலகுவில் ஏமாற மாட்டார்கள் ஆனால் நகரத்தில் உள்ளவர்களை இலகுவாக ஏமாற்றிவிடலாம்.
எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை குறும்படமாக வெளியிட்டுள்ளார் சுமன். கதை சுருக்கம் இது தான். பல்பொருள் அங்காடி ஒன்றில் இளைஞர் ஒருவர் புதிதாக வேலைக்கு சேர்கிறார். அங்கு வரும் இளைஞர் ஒருவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தியா என உரிமையுடன் கேட்கிறார்.
ஆம் என்ற கடையில் நிற்கும் இளைஞன் வந்தவர் பற்றி கேட்கையில் நான் தான் இந்த கடையின் முதலாளி என்னை தெரியாதா என கேட்கிறார். தெரியாது நான் உங்களுடன் போனில் மட்டும் தான் பேசி இருக்கிறேன் என மன்னிப்பு கேட்கிறார்.
முதலாளி என கூறிய இளைஞன் கடையில் பல பொருட்களை வீட்டுக்கு என மூட்டைகட்டிக் கொள்வது வியாபார பணத்தையும் தா என கூறி வாங்கிச் செல்கிறார். அதன் பின் நடப்பவை தான் ட்விஸ்ட். சரி வீடியோவை பாருங்களேன் புரியும்..!!