“வனிதாவின் 5வது கணவர் இவர் தான் ” உறுதியாக கூறிய பிரபல நடிகர்.! வைரலாகும் புகைப்படம்..!
வனிதாவின் 5வது கணவர் பற்றி நடிகர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறது. நட்சத்திர குடும்பத்தில் மகளாக பிறந்த வனிதா அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவதால் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப் பட்டார்.
நடிகர் ஆகாஷை திருமணம் செய்து விவாகரத்தான வனிதா பின்னர் தொழிலதிபர் ஆனந்த ராஜ் என்பவரை திருமணம் செய்தார், அவரிடம் இருந்து விலகி ராபர்ட் மாஸ்டருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர் கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து மூன்று மாதங்கள் கூட வாழாமல் பிரிந்தார்.
தற்போது திருமணமோ, காதலோ வேண்டாம் என திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அரசியல் வாதியான ஹரி நாடாருடன் இணைந்து திரைப்படம் ஒன்றை வனிதா நடிக்கிறார்.
வனிதாவும் ஹரி நாடாரும் தூரத்து உறவு என அண்மையில் வனிதா கூறி இருந்த நிலையில் வனிதா 5வதாக ஹரி நாடாரை திருமணம் செய்துகொள்வார் என பயில்வான் ரங்கநாதன் உறுதியாக கூறியுள்ளார்.