3வது திருமணத்தின் பின்பும் திருந்தாத வனிதா.! லிவிங் டுகெதர் காதலர் அதிரடி..!!
வனிதா பீட்டர் பால் திருமணம் நடந்ததில் இருந்து ஏராளமான சர்ச்சைகள் இருந்துகொண்டே இருக்கிறது. பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் கொடுத்தார், பீட்டரின் மகன் பேட்டி கொடுத்தார். அது மட்டும் இன்றி பலரும் வனிதாவை திட்டி தீர்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் வனிதாவின் லிவிங் டுகெதர் காதலரான ராபர்ட் மாஸ்டர் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் அதில் வனிதா திருந்திவிட்டார் என நினைத்திருந்தேன், அவர் திருந்தவில்லை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரது செயற்பாடுகள் மகிழ்ச்சியளித்தது.
“சிங்கப் பெண்” என என கொண்டாட நினைத்தோம். ஆனால் அவர் அப்படியே தான் இருக்கிறார்.பீட்டர் பாலை திருமணம் செய்து பீட்டர் பாலின் குடும்பத்தை கெடுத்து அவர் வாழ்க்கையை வீணாக்கி விட்டார், பீட்டர் பால் காதலிப்பதாக கூறி இருந்தால் கூட முடியாது உன் குடும்பத்தை பார் என கூறியிருக்கலாம்.
திருமணம் முடிந்த பின்பும் திருந்துவதாக இல்லை, பீட்டர் பாலின் மனைவியை திட்டுகிறார். இவர் எத்தனை திருமணம் செய்தாலும் ஆண்கள் விடயத்தில் திருந்த மாட்டார் என தெரிவித்துள்ளார்..!!