மூன்றாவது கணவருடன் உதட்டு முத்தத்தை பகிர்ந்துகொண்ட நடிகை வனிதா..! திருமணம் முடிந்ததுமே இந்த ரொமான்ஸ் தேவையா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
இன்றைய தினம் நடிகை வனிதாவின் திருமணம் மிகப் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடிகர் ஆகாஷுடன் நடந்த திருமணம் 2 வருடங்களில் முடிவடைந்த நிலையில் இரண்டாவதாக வனிதா காதலித்து திருமணம் செய்தவர் ஆனந்தராஜ்.
அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்தார். பின்பு டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்ந்தார். ஆனால் அதுவும் சில மாதங்களில் பிரிந்தது. அதன் பின் பீட்டர் போல் என்பவரை காதலித்து வருவதாக கடந்த வாரம் வைரலானது.
அதை ஒத்துக் கொண்ட வனிதா இன்றைய தினம் அவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். முக்கிய உறவுகள், நண்பர்களுடன் வனிதாவின் இரண்டு குழந்தைகளும் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டதுடன் பதிவு திருமணமும் செய்துகொண்டனர். அத்துடன் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் இருவரும் உதட்டு முத்தத்தையும் பகிர்ந்துகொண்டனர்…!!