கொரொனா வைரஸை கட்டுப் படுத்த அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் வெளியே வந்து வனிதா செய்யும் மோசமான செயல்..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
கொரோனா வைரஸினால் உலகமே தவித்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாட்டு அரசும் தன் மக்களை காப்பாற்ற போராட்டிக் கொண்டிருக்கின்றது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, போன்ற நாடுகள் தலையில் கை வைத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியாவும் தன் நாட்டு மக்களை காப்பாற்ற போராடி வருகிறது. இதற்காக 21 நாட்கள் 144 தடை போட்டுள்ளது. இந்த நிலையில் மக்களை முடிந்த அளவு வீட்டில் இருக்கும் படி அரசு கூறி வருகின்றது. முக்கியமான, அவசர தேவை தவிர்த்து வெளியே செல்ல வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த நேரத்தில் நடிகை வனிதா செய்துள்ள செயல் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. அனைவரும் அன்றாட உணவுக்கு தவித்து வருகின்றனர். இருப்பினும் வீட்டுக்குள் இருக்கின்றனர். ஆனால் வனிதா தனது அவசர தேவை எதுவும் இன்றி தனது புதிய யூடியூப் சேனலில் சமையல் நிகழ்ச்சிக்காக பொருட்கள் வாங்க ஷாப்பிங் சென்றுள்ளார்.
ஒட்டுமொத்த பிரபலங்கள் மக்களை வீட்டுக்குள் இருங்கள் என கூறி வரும் நிலையில் வனிதா வெளியே வந்து புகைப்படங்கள், மற்றும் வீடியோ வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது..!!