வனிதாவின் குழந்தைகளுக்கு ஹொஸ்டல் வாழ்க்கையா.? வனிதாவின் திருமணத்தால் தொடரும் சர்ச்சை.!!
நடிகை வனிதாவின் திருமணம் எல்லா பக்கத்திலும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் வனிதாவின் மூன்றாவது கணவரின் மனைவி எலிசபெத் வனிதா மீது புகாரை அடுக்கிக் கொண்டிருக்க இன்னுமொரு பக்கம் ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் எதிர்ப்பையும் கருத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் வனிதாவின் திருமணம் பற்றி கதைத்து வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதே போல் தற்போது பிரபல நடிகையான குட்டி பத்மினி வனிதாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
வனிதாவின் திருமணத்திற்கு வாழ்த்து சொன்ன குட்டி பத்மினி வனிதா மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த ஒருவரை திருமணம் செய்துள்ளாய், அதனால் தயவுசெய்து உன் குழந்தைகளை ஹாஸ்டலில் விட்டு விடு என கூறியுள்ளார். இதனை பார்த்த வனிதா கடுப்பானதுடன் ” என் வாழ்க்கை என் குழந்தைகளுக்கானது, நான் வாழ்வதும் அவர்களுக்காக தான்,
அப்படி இருக்கையில் எப்படி நீங்கள் இப்படி பேசலாம். உங்கள் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன் என திட்டினார் வனிதா. இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட குட்டி பத்மினி இது உன் வாழ்க்கை குழந்தைகள் விடயத்தில் கவனம் செலுத்து என குறிப்பிட்டுள்ளார். இதற்கு வனிதா என் மனம் உடைந்துவிட்டது என பதில் அளித்துள்ளார்..!!