வனிதாவின் திருமணம் பற்றி முதல் முறை பேசிய வனிதாவின் 23 வயதான மகன் ஸ்ரீஹரி..! இந்த வேதனையா இவர் மனதில்..!!
வனிதா பீட்டர் பால் திருமணத்தின் பின் இவர்கள் உருவரின் குழந்தைகள் பற்றிய கதை அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே பீட்டர் பாலின் மகன் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது வனிதாவின் மகன் ஸ்ரீஹரி நண்பர்களிடம் பேசியவை வைரலாகி வருகிறது.
வனிதா மற்றும் ஆகாஷின் மகனான ஸ்ரீஹரிக்கு தற்போது 20 வயதாகிறது. சிறு வயதிலேயே வனிதாவுடன் செல்ல முடியாது என சண்டையிட்ட ஸ்ரீஹரி தனது தாத்தாவிடமும் தந்தை ஆகாஷிடமும் வாழ்ந்து வருகிறார். அண்மையில் இவரது தாய் 3வது திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து இவரிடம் பேச பலர் முயற்சி செய்த போதும் ஸ்ரீஹரி யாருடனும் பேசவில்லை.
இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஸ்ரீஹரியுடன் பேச முயற்சி செய்த போது மறுத்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீஹரியின் நெருகிய நண்பர் ஒருவரிடம் ஸ்ரீஹரி பேசிய நிலையில் ஸ்ரீஹரி பற்றிய விடயங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தாயின் 3வது திருமணத்தில் தனக்கு கவலை ஏதும் இல்லை, என்று கூறியுள்ள ஸ்ரீஹரி என்னிடம் அவரது திருமணம் பற்றி கேட்கும் போது தான் ஓ அவர் தான் என் தாயா என தோன்றுகிறது. எந்த மகனுக்கும் என் நிலை வரக் கூடாது. எனக்கு தாயாக தந்தையாக என் அப்பா ஆகாஷ் இருக்கிறார், சித்தி, தாத்தா எல்லோரும் என்னில் பாசமாக இருக்கின்றனர் இவர்கள் போதும் எனக்கு என தெரிவித்துள்ளார்..!!