அத்துமீறி நடந்துகொள்ளும் வனிதா..! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
மூன்று திருமணங்கள், ஒரு லிவிங் டுகெதர், என அசால்டாக கடந்து செல்பவர் நடிகை வனிதா. நட்சத்திர குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்த இவர் ஒட்டுமொத்த குடும்ப மானத்தையும் வாங்கி விட்டதாக குடும்பத்தினரால் திட்டி தீர்க்கப் பட்டுக் கொண்டிருக்கின்றார். இரண்டு தங்கைகளுக்கு அக்காவாக இருக்கும் வனிதாவின் செயற்பாடுகள் விஜயகுமார் குடும்பத்தினருக்கு பிடிக்காததால் வனிதாவை ஒதுக்கியே வைத்து விட்டனர்.
இதனால் தனக்கும் வாழ்க்கை வேண்டும் என மூன்றாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. ஆனால் அவரது திருமணத்தில் குழப்பங்கள் சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வனிதாவின் கணவர் பீட்டர் பாலின் மனைவி ஒவ்வொரு மீடியாவாக சென்று நீதி கேட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் வனிதாவும் அடங்குவதாக இல்லை,
அவரும் ஏதாவது புகைப்படத்தை வெளிட்டு ரசிகர்களை கடுப்பேத்திக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் இன்றைய தினம் வனிதா மறுபடியும் முத்தக் காட்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை லிப் லாக் காட்சிகளை வெளியிட்டு வந்த வனிதா இந்த முறை நெற்றி முத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு
” மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று ” என பதிவிடுள்ளார்.! இதனை பார்த்த ரசிகர்கள் அடங்கவே மாட்டீர்களா.? பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு இப்படி செய்கிறீர்களே என திட்டி தீர்த்து வருகின்றனர்..!!