இரவில் உறங்க முடியாமல் வறட்டு இருமல் தொல்லை செய்கிறதா.? அப்படியானால் இந்த மருந்தை சாப்பிடுங்கள் உடனடியாக குணமாகி விடும்…!!
வலிமை கொடுக்கும் பழமாக இருப்பது விளாம்பழம். இது பல நோய்களை குணப்படுத்துகிறது. இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, விட்டமின் ஏ சத்தும் கொண்டது. இதை அதிகம் சீனி சேர்த்து சாப்பிடுவார்கள் . ஆனால் இப்படி 21 நாள் செய்தால் பித்தம் போய்விடும்.விளாம்பழத்தை சாப்பிடுவதால் ஆயுள் கூடும், அறிவு வளர்ச்சியும் அதிகரிக்கும். இதிலும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது. ஜீரண கோளாரால் அவஸ்தைபடுவர்கள் விளாம்பழம் சாப்பிட்டால் சுகம் கிடைக்கும்.
விளாமர பட்டையை இடித்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால், வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய்கசப்பு இருப்பவர்களுக்கு சிறந்த நிவாரணி இது.இதை இளமையாக இருக்கவும் சாப்பிடாலாம். வெயிலில் அதிகம் திரிபவர்கள், முகத்தில் வறட்சி, சுருக்கம் வந்தவர்களும் இதை பயன்படுத்தலாம்.
2டீஸ்பூன் பசும்பாலுடன், 2டீஸ்பூன் விளாம்பழ விழுதை சேர்த்து, கரைத்து மாஸ்க் போல போட்டு, 15 நிமிடம் விட்டு கழுவினால் முகத்தில் பொழிவு கிடைக்கும்.பெண்களுக்கு இருக்கும் ரத்தபோக்கை போக்க, வெள்ளைபடுதலை நிறுத்த, விளா மரத்தின் பிசினை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி, சாப்பிட்டு வரவேண்டும்.
விளா இலையை கொதிக்க வைத்து, அதன் தண்ணீரை குடித்தால், வாயுத்தொல்லை நீங்கும்.பசி எடுக்காதவர்கள் விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் பசி எடுக்கும். நோய் அணுக்களை அழிக்கும் தன்மை இதற்கு உள்ளது. சிலருக்கு கை, கால்களில் அதிகம் வேர்க்கும் அதற்கு விளாம்பழத்தை தினமும் சாப்பிட்டு வரவும்.