வயிற்று எரிச்சல் தாங்க முடியவில்லையா.? என்ன செய்தாலும் சரிவரவில்லையா..!? இதோ உங்களுக்காக பாட்டி வைத்தியம்..!!
வேலைக்கு செலபவர்கள் உணவுகளை சரிவர சாப்பிட மாட்டார்கள் இதனால் உடல் சோர்வடைந்து விடும், இவரடகள் வெயிலில் அலைபவர்கள், மனதில் கவலைகளை வைத்து மனச்சோர்வுடன் திரிபவர்கள் அனைவருக்கும் இந்த சோர்வின் காரணமாக உடல் ஆரோக்கியம் அற்று போய்விடும். இதனை சரி செய்ய புத்துணர்ச்சியை ஊட்டும் கம்பை கூழாக்கி அதனுடன் மோரை கலந்து மதிய வேளைகளில் தினமும் குடித்து வந்தால் சோர்வின்றி சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாவும் இருக்கலாம்..
அஜீரண கோளாறால் கஸ்டப்படுபவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசிக்கும், பசியெடுக்கும் போது சாப்பிட தோன்றும் இதனால், வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் இந்த கம்பங்கஞ்சிக்கு உண்டு.
வயிற்றில் புண்; உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் என யோசித்தால் இந்த கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண் வயிற்றுப்புண் வாய்ப்புண் குணமாகும்.உடலை வலுவடைய வைக்கும் சக்தி இந்த கம்புக்கு உண்டு . அதற்கு இது மிகச்சிறந்த உணவாகும். இந்த கம்பங்கஞசியை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதனால் உடலுக்கு தேவையான சத்துக்களை அளித்து வலுவான உடலாக வைத்திருக்க உதவும்.
இந்த கம்பங்கஞ்சி பல்வேறுபட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது. கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். நாம் இன்றைய காலத்தில் அதிகளவு எதிர்கொள்வது இளநரை இதனை குடித்து வந்தால் இளநரையைப் போக்கும்.
நம் உடலுக்கு ஆரோக்கியம் என அதிகமாக சாப்பிடுவம் அவ்வாறு எதையும் எடுக்கக்கூடாது, அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்