வெள்ளப்பெருக்கு காரணமாக இந்தியாவில் 114 பேர் உயிரிழப்பு…!!
இந்தியாவில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, இடிமின்னல் போன்ற ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இந்தியாவில் பல இடங்களில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள அனர்த்தத்தினால் 114 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்ததோடு, 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
!Advert!
அதிக மழை பெய்த காரணத்தினால் மூடப்பட்டிருந்த கொச்சின் விமான நிலையம் இன்று பிற்பகல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் பாதுகாப்பு படையினார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கும் நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
!Advert!
கேரள மாநிலத்தை போன்று கர்நாடகா, மாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.