நாளை மறுதினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட போகிறவர் யாரும் எதிர்பார்க்காத இவர் தானாம்.! சற்று முன் கசிந்த தகவல்.!!
பிக் பாஸ் வீட்டில் இறுதி சுற்றுவரை யார் செல்வார்கள் யார் இடையில் வெளியேற போகின்றார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக் பாஸ் வீட்டில் 17வது போட்டியாளராக அர்ச்சனா கலந்துகொண்டார். அர்ச்சனா வந்ததில் இருந்து வீட்டிற்குள் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது. அதுவரை ஹீரோவாக இருந்த சுரேஸ் அர்ச்சனா வந்ததுமே ஸீரோவானார்.
வீட்டிற்குள் அர்ச்சனா வைத்தது தான் சட்டம் என்பதால் அர்ச்சனாவை பிடிக்காவிட்டாலும் அவருக்கு ஆமாம் சாமி போட ஆரம்பித்தனர். இந்த நிலையில் பாலாஜி மட்டும் அர்ச்சனா மற்றும் ரியோ குரூப்பிற்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில் அவரையும் அன்பு என்ற ஒன்றை காட்டி அர்ச்சனா அடிமையாக்கிக் கொண்டார்.
ஆனால் அடங்குவாரா பாலா, இன்று இந்த வாரத்தில் மிகவும் மோசமான எதிலும் ஈடுபாடு இல்லாத போட்டியாளர்களாக ஆரி மற்றும் அனிதா தேர்வானார்கள். இதனை ஆரி எதிர்த்ததுடன் ஒவ்வொருவர் பற்றியும் புட்டு புட்டு வைப்பேன் என மிரட்டினார். இதற்கு ஆதரவாக பாலாஜி பேச ஆரம்பித்த போதும் அர்ச்சனா தனது குரலை உயர்த்தினார்.
இதனால் அர்ச்சனா நாமினேஷன் லிஸ்டில் வந்தால் அவரை வெளியேற்ற ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய நாளை மறுதினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி நிஷா ஆகக் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இருப்பினும் நிஷா வெளியேற்றப் பட மாட்டார், அவர் குறித்த தொலைகாட்சியின் செல்லப் பிள்ளை. அதனால் இரண்டாவதாக குறைவான வாக்குகள் பெற்றிருக்கும் வேல்முருகன் வெளியேற்றப் படுவார் என கூறப்படுகின்றது. இம்முறையும் ஆஜித் தப்பித்துக் கொண்டார். நாளை மறுதினம் பார்க்கலாம் யார் வெளியேறுகிறார்கள் என்று.!