பிக் பாஸ் சீசன் 4ல் ரேகாவை தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றப் படுபவர் இவர் தானாம்.! வெளியாகி உள்ள உறுதியான தகவல்.!!
பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். அவர் எதை செய்தாலும் அதனை தவறு என்று கூற அர்ச்சனா, ரியோ, நிஷா மற்றும் வேல்முருகன் ஆகியோர் இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது நிஷாவிற்கு இருந்த ஆதரவிற்கு நிஷா தான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் நிஷாவிற்கு ரியோவை கவனித்துக் கொள்ளவே நேரம் போதுமானதாக இருக்கின்றது.
ரியோவிற்கு எப்படி ஆதரவு கொடுப்பது என்பதை பற்றியே நிஷா மற்றும் அர்ச்சனா நினைப்பதால் அவர்களால் பாலாஜியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பேசுவார் என எதிர்பார்க்கப் பட்ட ஆரி தற்போது நமக்கு ஏன் வம்பு என இருக்கிறார். ஜித்தன் ரமேஷ் யார் எது சொன்னாலும் அது தான் சரி என்பது போல் தலையாட்ட ஆரம்பித்து விட்டார். ஆஜித் ஏன் வந்தோம் என்பதை மறந்து ஏன் அப்படி சொன்னீர்கள் ஏன் இப்படி சொன்னீர்கள் என கேட்டுக் கேட்டே நாட்களை நகர்த்துகிறார்.
பிக் பாஸ் என்றால் என்ன ? எப்படி விளையாட வேண்டும் என்பதை முழுமையாக உணர்ந்து விளையாடி வருகிறார் ரம்யா பாண்டியன். ஷிவானி சம்யுக்தா கேப்ரியலா மூவரின் உலகம் வேறாக இருக்கிறது. அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறோம் என்பதையே மறந்து விட்டார்கள் போல் உள்ளது. அனிதா அனுதாபம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்.
சுரேஷ் ஆரம்பத்தில் அக்டிவாக இருந்தாலும் இப்போ ஏனோ தானோ என்றே இருக்கிறார். இவர்களில் இம்முறை 11 பேர் நாமினேஷனில் வந்துள்ளனர். வந்தவர்களில் என்ன தான் சர்ச்சைகளில் சிக்கினாலும் முதலிடத்தில் அதிக வாக்குகள் பெற்று பாலாஜி இருக்கிறார். இரண்டாம் இடத்தில் சுரேஷ். இவர்களில் இறுதி இரண்டு இடத்தில் அனிதா மற்றும் வேல்முருகன் இருக்கிறார்கள்.
ஆகக் குறைந்த வாக்குகள் என்றால் அது வேல்முருகனுடையது தான். வீட்டில் எந்த அக்டிவும் இல்லாமல் அர்ச்சனாவிற்கு ஜால்ரா அடிக்கும் வேல்முருகன் இந்த முறை வெளியேற்றப் பட போகிறாராம். பொறுத்திருந்து பார்க்கலாம்.!!