மாதவிடாய் வலியை தாங்க முடியாமல் அண்ணனை வெளியே அனுப்பிவிட்டு சிறுமி செய்த செயல்! கதறி துடிக்கும் தாய்.!!
சென்னை ஆதம்பாக்கம் மோகனூர் பகுதியில் வசித்து வந்த 13 சிறுமி ஒருவரின் மரணம் தாய் மற்றும் சகோதரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மோகனூர் பகுதியில் கணவரை பிரிந்து வசித்து வருபவர் வெங்கம்மா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெங்கம்மாவின் கணவர் குழந்தைகளுடன் மனைவியை விட்டு சென்று விட்டார்.
2 குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு கஷ்டப் பட்டு வந்துள்ளார் வெங்கம்மா. மகன் 8ம் வகுப்பிலும் மகள் ஜெயந்தி 6ம் வகுப்பிலும் கல்வி கற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வெங்கம்மா வழமை போல் வேலைக்கு சென்றுள்ளார். காலையில் இருந்து வயிறு வலி என கூறிக்கொண்டிருந்த ஜெயந்தி பகல் நேரத்தில் உடை மாற்ற வேண்டும் என தனது அண்ணாவை வெளியே செல்லும் படி கூறியுள்ளார்.
சகோதரன் வெளியே வந்து தங்கை கூப்பிடும் வரை காத்திருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் தங்கை கதவை திறக்கவில்லை, இதனால் சிறுவன் கதவை தட்ட ஆரம்பித்துள்ளான். நீண்ட நேரமாக சிறுவன் கதவை தட்டுவதை பார்த்த அயலவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது மின் விசுரியில் தாயின் சாரியில் தூக்கில் தொங்கியபடி ஜெயந்தி இருந்துள்ளார்.
உடனடியாக சிறுமியை வைத்தியசாலை கொண்டு சென்ற போதும் ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு சிறுமி பெரியவளானதாகவும் இவரால் வயிறு வலியை தாங்க முடியவில்லை, தாய் ஏற்கனவே வைத்தியசாலையில் மருந்து எடுத்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. மாதவிடாய் வலியை தாங்க முடியாமல் சிறுமி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.