வெந்தயத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுங்கள்.! ஏன் தெரியுமா,? இதை படியுங்கள்.!!
சிறு நீர் கடுப்பு” சொல்லும் போதே கடுப்பாகும் ஒரு விடயம் தான் இந்த சிறு நீர் கடுப்பு. இது எதனால் ஏற்படுகின்றது என்று பார்க்கலாம். சிறு நீர் குழாய்களில் ஏற்படும் கிருமிகள் தொற்று தான் காரணம். இது ஆபத்தானதா என கேட்டால் ஆமாம் என்றே சொல்ல வேண்டும். இது சாதாரண சூட்டுக்கு ஏற்படும் சிறு நீர் கடுப்பு என பலர் கூறினாலும் இது தொடர்ந்து இருந்தால் கண்டிப்பாக வைத்தியரை நாட வேண்டும்.
சாதாரண சிறு நீர் கடுப்புக்கு நாம் கொடுத்திருக்கும் இந்த மருந்து போதுமானது. ஆபத்தான சிறு நீர் கடுப்பு என நாம் சொல்லுவது சிறு நீரக பிரச்சனைக்கு முன் ஏற்படும் கடுப்பு.இதற்கான அறிகுறிகளாக முகம் மற்றும் கால் வீக்கம், அடிக்கடி சிறு நீர் கழிப்பது ஆனால் குறைவாக சிறு நீர் வெளியேறும். தலை சுற்றல், வாந்தி, பசி இன்மை, போன்றவை இருந்தால் வைத்தியரை நாடி சிறு நீரக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
மற்றயவை சாதாரண நீர் கடுப்பு தான்.இவை அதிக நேரம் வெயிலும் நின்றால் அல்லது தொலை தூர பயணம் சென்றால், நீர் அதிகம் அருந்தாவிட்டால், கோடை காலம் ஏற்பட்டால், அதே போல் மாதவிடாய், போன்ற நாட்களில் இந்த சிறு நீர் கடுப்பு ஏற்படும்.இதற்கு பயப்பட தேவை இல்லை இதற்காக வைத்தியசாலை செல்லவும் தேவை இல்லை. வீட்டிலேயே தீர்வு உள்ளது.
இதற்கு தேவையான பொருட்கள். வெங்காயம், வெந்தயம், தண்ணீர் இவ்வளவு தான் தேவை. தண்ணீரை சூடாக்கி வெங்காயத்தை போட்டு வேக வையுங்கள்.அதனுடன் ஊற வைத்த வெந்தயத்தையும் போடுங்கள். ஒரு இரண்டு தொடக்கம் 3 நிமிடம் வேக வைத்து வடித்து எடுத்து குடியுங்கள். அவ்வளவு தான் நீர் கடுப்பு ஓடியே போய்விடும் இதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!