வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, உட்பட ஏராளமான திரைப்படங்களுக்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் கிருபா திடீர் மரணம்.! சோகத்தில் திரையுலகம்.!!
வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை போன்ற திரைப்படங்களுக்கு பாடல் எழுதிய கவிஞர், பாடலாசிரியர் பிரன்ஸிஸ் கிருபா அவர்கள் நேற்றைய தினம் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சாதாரண கிராமத்தில் பிறந்த பிரான்ஸிஸ் கிருபா அவர்கள் சிறு வயதில் இருந்தே தமிழ் மீது அதிக பற்று கொண்டவர்.
பள்ளி வரை படித்த கிருபா கல்லூரி படிக்க விரும்பவில்லை, அதற்கு பதில் இயற்கை, தமிழ் என அதிக ஆர்வம் கொண்டு சிறந்த கவிதைகளை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தார். அவரது படைப்புகளில் மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் போன்றவை ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகின்றது.
பல விருதுகளுக்கு சொந்தகாரரான பிரான்ஸிஸ் கிருபா உடல் நலம் பாதிக்கப் பட்ட நிலையில் வியாழக் கிழமை நள்ளிரவு மரணமடைந்துள்ளார்.இவரது மரணம் திரையுலகத்திற்கு மிகப் பெரிய இழப்பு என கவிஞர்கள் பலரும் தங்கள் அனுதாபங்களை கூறி வருகின்றனர். எங்கள் ஆழ்த்த அனுதாபங்கள்.!/