சிறு நீர் கழிக்கும் போது இரத்தக் கசிவு, எரிச்சல், போன்றவை இருக்கிறதா.!? இதோ உங்களுக்கான உடனடி மருத்துவம்.! நீங்களும் பயன்பெற்று அனைவரும் அறிந்துகொள்ள பகிருங்கள்…!!
எல்லோரும் வெந்தயத்தை சமையறையில் கண்டிப்பாக வைத்தருப்பார்கள், பொதுவாக வெந்தயத்தில் அதிகளவான மருத்துவ குணங்கள் உள்ளது. இதை உணவில் சேர்ப்பதால், உணவின் சுவை கூடும். அத்தோடு வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும். இப்படி ஏராளமான நன்மைகள் வெந்தயத்தில் உள்ளது. வெந்தயத்தை சமையலுக்கு மட்டுமின்றி, டீயாகவும் தயாரித்து குடிக்கலாம்.
இப்படி டீயாக நாம் பருகும் போது, நம் உடலுக்கு தேவையான அதிகளவான சத்துக்களை கொடுக்கிறது.வெந்தய டீ தயாரிப்பது எப்படி?ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.
இப்படி குடிப்பதால் ஏற்படும் நன்மை தெரியுமா???மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் பெண்கள் இப்போது வெந்தயத்தை டீயாக வைத்து குடித்தால் உடனே சுகம் வரும்.பூப்படையும் வயதில் உள்ள பிள்ளைகளுக்கு மார்பக வளர்ச்சி ஆரோக்கியமா இருக்க வெந்தய டீயை குடிக்கலாம்.அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த வெந்தய டீயை குடிப்பதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.
இரத்த அழுத்தம் , கொலஸரோல் உள்ளவர்கள் வெந்தய டீ மூலம் பலன் காணலாம். வெந்தயத்தில் கொழுப்பை குறைக்கும் தன்மையுள்ளது.மலச்சிக்கல் பிரச்சனையில்லாமல் இருக்கவேண்டுமென்றால் தினமும் காலையில் வெந்தய டீயினை குடிக்க வேண்டும் குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக கொள்ள அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.
இதய நோயால் அவஸ்தைபடுவர்களும் இந்த வெந்தய டீ மூலம் பலன் பெறலாம்.பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால் அது பிரசவ வலியைத் தூண்டுவதோடுஇ எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து, வெந்தய டீ குடிக்க வேண்டும். இதனால் தாய்ப்பாலில் சத்துக்களும் தாய்ப்பால் சுரப்பது அதிகமாவும் சுரக்கும் காரணம் இதில் வைட்டமின், கனிமச்சத்தும் ஏராளமாக இருக்கிறது.
வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.அல்சர் உள்ளவர்கள் வெந்தய டீ மூலம் வயிற்றுபுண் ஆறி, குளிரிச்சியடைய வைக்கும். வாய் துர்நாற்றம் உள்ளவர்களும் இதை பருகலாம், சிறுநீர் கழிக்கும் போது எரிவு, இரத்த கசிவு உள்ளவர்கள் தினமும் வெந்தய டீ குடிக்க வேண்டும். அத்தோடு தொண்டை புண் உள்ளவர்களும் அருந்தலாம்.