திருமணம் செய்வதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியதாக புகார் கொடுத்த பெண்ணுக்கு கால் செய்து மிரட்டல் விடுத்த ஆர்யா.! இணையத்தில் வெளியான ஆடியோ.!!
ஜேர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண்ணிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக ஆர்யா மீது குறித்த பெண் புகார் கொடுத்திருந்தார். ஆன்லைன் மூலம் கொடுத்திருந்த குறித்த புகாரில் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி ஆர்யா என்னிடம் இருந்து 80 லட்சத்திற்கு அதிகமான பணம், மற்றும் கிப்ட் என்கிற பெயரில் நகை என வாங்கி ஏமாற்றிவிட்டார்.
பின்னர் அப்பாவின் கட்டாயத்தின் பேரில் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறினார். ஆனால் ஆர்யா ஷாயிஷாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் திருமணம் முடித்து விட்டீர்கள் தானே என் பணத்தை திருப்பி தாருங்கள் என கேட்ட போது ஆர்யாவின் தாயார் என்னை தகாத வார்த்தைகள் கொண்டு திட்டினார்,
பணத்தை திருப்பி கேட்டால் தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டுகிறார். என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பொலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் விட்ஜாவிற்கு ஆர்யா கால் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை விட்ஜா ரெகோர்ட் செய்துள்ளார். குறித்த ஆடியோவில் தயவு செய்து புகாரை வாபஸ் வாங்கிவிடு, இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன், இதனால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். இதனை ரெகோர்ட் செய்த பெண் இணையத்தில் வெளியிட தற்போது வைரலாகி வருகிறது.