“லாபம்” திரைப்பட படபிடிப்பில் விஜய் சேதுபதி செய்த செயல்.! கடுப்பாகி ஷூட்டிங் தளத்தைவிட்டு வெளியேறிய ஸ்ருதிஹாசன்.!!
விஜய் சேதுபதியின் செயலால் கடுப்பாகி திரைப்பட சூட்டிங்கில் சில மணி நேரங்கள் ஸ்ருதிஹாசன் வெளியேறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் ஹட்ரிக் நாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்த நடிகரின் தீவிர ரசிகராக இருந்தாலும் விஜய் சேதுபதியின் திரைப்படம் வெளியானால் பார்த்து விடுவார்கள்..
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் இன்று மக்கள் சொல்வனாக ரசிகர்களால் கொண்டாடப் படுகின்றார். விஜய் சேதுபதி ஸ்ருதிஹாசன் உடன் ஜோடி சேர்ந்து தற்போது நடித்து வரும் திரைப்படம் “லாபம்”. கொரோனா வைரஸினால் படபிடிப்பு தள்ளி வைக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி விட்டது.
ஸ்ருதி மற்றும் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய முக்கிய காட்சிகள் படமாக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் நடிகர் விஜய் சேதுபதியை சந்திக்க அவரது ரசிகர்கள் வந்துள்ளனர்.வழமை போல் விஜய் சேதுபதி ரசிகர்களை கட்டிப் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
கொரோனா காலத்தில் கட்டிப் பிடிக்காதீர்கள் கை கொடுக்காதீர்கள் என சொல்லிக் கொண்டிருக்கும் போது விஜய் சேதுபதி இப்படி செய்வது ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை. கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இவருடன் நெருக்கமாக நடிக்க முடியாது என கூறிய ஸ்ருதிஹாசன் ஹோட்டலுக்கு சென்றுவிட்டாராம் அதனால் நேற்றைய படபிடிப்பு நடக்கவில்லையாம். ரசிகர்கள் மீது அன்பு இருக்கத்தான் வேண்டும் கொரோனா நாட்களில் கட்டிப் பிடிப்பதை தவிர்ப்பது நல்லது என பலரும் கூறி வருகின்றனர்.!!