விஜய் டிவியால் ஏமாற்றப் பட்ட இலங்கை பெண் புண்யாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்..! குவியும் வாழ்த்துக்கள்..! என்ன தெரியுமா ..இத பாருங்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்களால் அதிகம் ரசிக்கப் படுகின்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் தான். சீனியர் ஜூனியர் என பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நேற்றைய தினம் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 7 நிறைவுக்கு வந்தது. வழமை போல் நேற்றைய தினமும் திறமைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த சீசனில் தங்கள் திறமையை அனைத்து போட்டியாளர்களும் காட்டிய போது இலங்கை பெண்ணான புண்யா மற்றும் விக்ரம் இருவரும் உச்சத்தில் இருந்தனர். இருவரின் பாடலிலும் யாராலும் குறை கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் வழமை போல் கஷ்டம், ஏழை, என மூக்குத்தி முருகனுக்கு டைட்டில் கொடுக்கப் பட்டது.
இந்த டைட்டிலுக்கு விக்ரம் அல்லது புண்யா தகுதியாக இருந்த போதும் விக்ரமுக்கு இரண்டாம் இடமும் புண்யாவிற்கு மூன்றாம் இடமும் கொடுக்கப் பட்டது சிறப்பு விருந்தினர் உட்பட அனைவருக்கும் வருத்தம் தான். இது பற்றி ரசிகர்களும் தங்கள் விமர்சனங்களை கூறி வந்த நிலையில் தற்போது மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.
மேடையில் வைத்து புண்யாவிற்கு வாய்ப்பு தருவதாக கூறிய அனிருத் உடனடியாக அதனை செயல்படுத்தியுள்ளார். அடுத்த திரைப்படத்தில் தனது இசையில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.. வாழ்த்துக்கள் புண்யா..!!