ஆசை பட்டது போலவே இன்று மரணமடைந்த ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை..!!
அண்மை காலமாக தமிழ் சினிமாவில் நடிக நடிகைகள் மரணமடைவது அதிகரித்துள்ளது. அதிலும் மூத்த கலைஞர்களின் மரணமும் சினிமா துறைக்கு மிகப் பெரும் இழப்பு தான், 60, 70,80, களில் சினிமா துறையில் பிரபலமாக இருந்தவர் நடிகை விஜய நிர்மலா.
மச்ச ரேகை திரைப்படத்தின் ஊடாக தமிழுக்கு அறிமுகமான இவர் எங்க வீட்டுப் பெண், சித்தி, பந்தயம், நீலகிரி எக்ஸ்பிரஸ், பணமா பாசமா, சிரித்த முகம், சத்யம் தவறாதே, சோப்பு சீப்பு கண்ணாடி, உயிரா மானமா, அன்பளிப்பு, என் அண்ணன், யானை வளர்த்த வானம்பாடி, ஞான ஒளி, என
தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் நடித்தார். தெலுங்கு,மலையாளம், ஹிந்தி என அத்தனை மொழி திரைப்படங்களிலும் நடித்த விஜய நிர்மலா இன்று தனது 75 வயதில் இயற்கை எய்தினார். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் வைத்திய சாலையில் இருந்தவர் 27 ம் திகதி வியாழக் கிழமை மரணமடைந்தது அவர் ஆசைப்பட்ட படியே தானாம்.
விஜய நிர்மலா ஒரு சாய் பாபா பக்தையாம்.. எப்போதாவது நான் மரணித்தால் அது வியாழக்கிழமையாக இருக்க வேண்டும் என கூறுவாராம். சாய்பாபாவின் நாளான வியாழக் கிழமை மரணமடைந்தது அவரது கடைசி ஆசையும் நிறைவேறி உள்ளதாம்..!!