கணவரின் நண்பர்களால் தற்கொலை செய்துகொண்ட திருமணமான பெண்.!! பொலீஸாருக்கு கிடைத்த பெண்ணின் இறுதி கடிதம்.!!
கணவரின் நண்பர்களால் திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் இவர் ரேஷ்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் என் மரணத்திற்கு கணவரின் நண்பர்களே காரணம் என எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, அதே ஊரை சேர்ந்த பாலமுருகன், மற்றும் முத்துக்குமார் இருவரும் விமல்ராஜின் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்கள் ஊரில் பெண்களை கேலி கிண்டல் செய்வதால் ரேஷ்மாவிற்கு இவர்களை பிடிப்பதில்லை, அதனால் இவர்களுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் அதே ஊரை சேர்ந்த 30 வயதான ரேஷ்மாவின் உறவினர் தென்னரசு என்பவர் விமல்ராஜின் வீட்டிற்கு வந்துள்ளார்.
விமல்ராஜ் வீட்டில் இல்லாததால் ரேஷ்மா டீ கொடுத்ததுடன் ரேஷ்மாவின் 2 வயது குழந்தையுடன் சிறிது நேரம் தென்னரசு விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். தென்னரசு விமல்ராஜ் வீட்டிற்கு செல்வதை பாலகுமரன் மற்றும் முத்துக்குமார் பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர்.பின்னர் விமல்ராஜை சந்தித்த முத்து மற்றும் பாலா நீ இல்லாத நேரம் உன் வீட்டிற்கு தென்னரசு சென்று நீண்ட நேரத்தின் பின் தான் வெளியே வந்தான் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய விமல்ராஜ் ரேஷ்மாவை கண்டித்துள்ளார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத ரேஷ்மா நண்பர்களின் வார்த்தையை ஏன் நம்பினீர்கள் என அழுதுள்ளார். விமல்ராஜ் ஆறுதல் கூறிவிட்டு வெளியே சென்ற நிலையில் ரேஷ்மா தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.!!