பெர்த் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது..!!!
அவுஸ்திரேலியாவில் பெர்த் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லைட் கோபுரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 62 பயணிகளும் நான்கு ஊழியர்களும் இருந்தாக தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரம் பிற்பகல் 2.20 மணியளவில் விமானம் தரையிறங்கியது. இந்த விபத்தில் கடவுள் புனியத்தில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் எற்படவில்லை,இந்த விபத்து குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் வேறு எந்தவொரு செயற்பாடுகளையும் சேவைகளையும் பாதிக்கவில்லை என பெர்த் விமான நிலையம் தரப்பில் கூறியுள்ளனர்.
!Advert!
மேலும் இந்த விமான விபத்து குறித்து தரையிறங்கிய விமானம் அங்கிருந்து நிறுத்துமிடத்திற்கு வரும் போது போது, கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என கோபாம் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சனையால் விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்தது. விமானத்தில் இருந்த 62 பயணிகள், நான்கு பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை. இந்த விமானம் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு சேவையை தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.