விநாயகர் சதுர்த்தி ஸ்பெசல் மோதகம் செய்வது எப்படி?
விக்கினங்களைத் தீர்த்து நமக்கெல்லாம் சகல நன்மைகளையும் அள்ளித் தருகின்ற விநாயகரின் பிறந்த தினம் இன்றாகும். இன்றைய நாள் பிள்ளையார் பகத்தர்கள் அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு நாளாகும்.பொதுவாகவே விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்த நன்னாளாகும்
இந்த நன்னாளாகிய விசேட தினத்தில் ஸ்பெசலாக மோதகம் செய்து பிள்ளையாருக்குப் படைத்த பின் வீட்டிலுள்ளவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள் வீட்டில் தித்திப்பான செய்திகள் வந்து சேரும்.
சரி மோதகம் செய்வது எவ்வாறு என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் எவையென்று பார்க்கலாம்
பச்சரிசி – 200 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
வெல்லம் அல்லது சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய் – 3 சிராங்கு
தேங்காய் – ½ பாதி
உப்பு – ¼ கரண்டி
இனி செய்முறையைப் பார்க்கலாம்
முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் போடவும்.
10 நிமிடங்கள் கழித்து எடுத்து மிசினில் கொடுத்து இடித்துக் கொள்ளவும்.
பின் கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும்.
வறுத்தெடுக்கும் போது மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.
பின் வறுத்த மாவினை சல்லடையில் போட்டு சலிக்கவும்.
கப்பியை மிக்ஸியில் போட்டு மீண்டும் சலிக்கவும். இப்போது கொழுக்கட்டை தயாரிக்க மாவு தயார்.
தேங்காயை துருவிக் கொள்ளவும். கட்டி வெல்லத்தை பொடியாக தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.
பின் தேங்காய் துருவல்,வெட்டிய கட்டி வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு சேரக் கலக்கவும். உள்ளீட்டுக் கலவை தயார்.
கொழுக்கட்டை மாவில் உப்பினைக் கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தேவையான அளவு நீரினைக் கொதிக்க வைக்கவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கொழுக்கட்டை மாவில் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறவும். மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.
அதில் இருந்து எலுமிச்சை உருண்டை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்யவும். அதில் சிறிதளவு உள்ளீட்டு கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும்.
பின் செய்துவைத்த மோதகங்களை இட்லிப் பானையின் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
பிறகென்ன தித்திப்பான பிள்ளையாருக்குப் பிடித்த மோதகங்கள் ரெடி!