பெற்ற பிள்ளைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மற்றும் கணவருக்கு உதவிய தாய்..! சிறுமியின் அதிரடி செயலால் கிடைத்த ஆயுள் தண்டனை..!!
விருதநகர் நகரை சேர்ந்த சேர்ந்த குடும்பம் ஒன்று பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில்
வசித்து வந்த நிலையில் சொந்த தந்தையே தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கடந்த வருடம் செய்தியாகி அனைவரையும் அதிர வைத்தது.தேங்காய் பிடுங்குவது , தென்னை மட்டை சேமிப்பதை தொழிலாக கொண்ட குறித்த நபர் 12 வயதேயான தனது மகளை 10 வயதில் இருந்தே பாலியல் தொல்லை செய்ய ஆரம்பித்தார்.
கணவர் மகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதை பார்த்தும் பார்க்காதது போல் இருந்துள்ளார். 2 வருடங்கள் பாலியல் தொல்லையை பொறுத்துக் கொண்ட குறித்த மாணவி பாடசாலையில் கற்றுக் கொண்டவற்றை மனதில் வைத்து நேராக பொலீஸ் ஸ்டேசன் சென்றுள்ளார். ஆனைமலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
சிறுமியின் புகாரில் எனது தந்தை குடித்துவிட்டு வந்து பாலியல் தொல்லை செய்கிறார். இதனை அம்மாவிடம் பல முறை சொல்லிவிட்டேன், நான் சொல்லும் போதெல்லாம் அம்மா என்னை அடிக்கிறார். அப்பா கொடுக்கும் பாலியல் தொல்லைக்கு அம்மாவும் உதவுகிறார் என குறிப்பிட்டிருந்தார். சிறுமியின் புகாரை ஏற்ற காவல்துறை தாய் மற்றும் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. 2019ம் ஆண்டில் இருந்து நடைபெற்ற வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.
சிறுமியின் வழக்கை விசாரித்து வந்த கோவை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் சிறுமியின் பக்க ஆதாரங்கள், அயலவரின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த தந்தைக்கும் உடந்தையாக இருந்த தாய்க்கும் ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.
அத்துடன் அரசு சார்பில் சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுமியை பாராட்டிய நீதிபதி ராதிகா தொடர்ந்து இதே துணிச்சலுடன் செயற்படுமாறு அறிவுரை வழங்கி உள்ளார். சிறுமி தற்போது சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து படித்து வருகிறார்..!