இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க தீர்மானம்…!!!
இந்தியாவின் சுதந்திர தினமான நாளை (ஆகஸ்ட் 15) இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்க இருப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா விமானப்படையில் வானூர்தி சீரகத் தலைவராக அபிநந்தன் விளங்கினார். இவர் 2019 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். சிறைபிடிக்கப்படுவதற்கு முன்பாக அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து வான்குடை மூலம் தரையிறங்கிய அபிநந்தன் அங்கிருந்த பாகிஸ்தான் மக்களால் தாக்கப்பட்டார். இவ்வாறு தாக்கப்பட்ட காணொலி காட்சி இணையத்தில் தீயாய் பரவியது. அந்த வேளையில் அபிநந்தன் நடந்து கொண்ட விதம், அவர் வெளிப்படுத்திய தேசப்பற்று இவற்றுக்காக உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடையே பெரும் அங்கீகாரம் கிடைத்தது. பின்னர் பாகிஸ்தான் அரசாங்கத்தை எதிர்த்து இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாதுகாப்பாகவும், நலமுடனும் மீட்க வேண்டும் என்று கோரிக்கைகள் உலகெங்கும் எழுந்துள்ளது.
!Advert!
அதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த போது அதனை துரத்திச் சென்று அழித்தவர் wing commander அபிநந்தன். பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்த நிலையில் அவரது வீர செயலையும், நாட்டின் பற்றையும் பாராட்டி இந்திய அரசு விருது ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளது. போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் வீர் சக்ரா விருது அபிநந்தன் வழங்கப்படவுள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.