நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் விஷாலை கடந்த வாரம் உடனடியாக நீக்கியது அரசு. எப்போதுமே இல்லாமல் நடிகர் சங்க விடயத்தில் அரசு எப்படி வந்தது? இதற்கும் அரசிற்கும் என்ன சம்மந்தம் என நாமும் யோசித்துக் கொண்டிருந்தோம் அதற்கான முழு விளக்கத்தையும் சினி கிளிட்ஸ் தெளிவு படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் யூனியனின் புகாரின் அடிப்படையிலும் ஆராய்ந்து பார்த்ததிலுமே இந்த தீர்மானத்தை அரசு எடுத்தது. நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் தலைவரானதில் இருந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறி இருந்துள்ளார். சினிமா துறை சார்த்த பணத்தையும் முறைகேடு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் கட்டட நிதி என பல நிகழ்ச்சிகளை நடத்தி அதில் ஒரு பங்கிற்கு இன்னும் கணக்கு வராத நிலை. சினிமாவில் நடிக்க வரும் போது பல கோடி ரூபாய்கள் கடனில் இருந்த விஷாலுக்கு தற்போது பலர் பல கோடி ரூபாய்கள் கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில் இவர் சினிமா துறையில் உள்ளவர்களை ஏமாற்றி வந்துள்ளார். இசைஞானி இளையராஜா உட்பட பலருக்கு கோடிகளை கொடுக்காமல் இன்று வரை இருப்பதாக நடிகர் சங்கத்தின் மீதும் விசால் மீதும் குற்றச் சாட்டுகள் குவிந்துள்ளது இதோ விபரம்.!