“என் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து போனது, தற்போது சிங்கிளாக இருக்கிறேன்” திருமணம் நின்று போனது பற்றி முதல் முதல் பேசிய விஷால்!!
தனது திருமணம் பற்றி முதல் முறை நடிகர் விஷால் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷாலுக்கு 2019ம் ஆண்டு அனிஷா ரெட்டி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விஷால் அனிஷா நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக செய்யப் பட்டது.
கடந்த வருட ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் திருமணம் நின்று போனதாக அறிவிக்கப் பட்டது. விஷாலின் காதலி அனிஷாவிற்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏன் திருமணம் நின்று போனது என தெரியாமல் ரசிகர்கள் மண்டையை உடைத்துக் கொண்ட நிலையில் விஷால் இது குறித்து பேசியுள்ளார்.
அதில் திருமணம் நடக்கும் என்ற கனவுகளுடன் தான் நானும் இருந்தேன், ஆனால் இறுதி நேரத்தில் எல்லாம் என் கை மீறி போனது, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டேன். கடந்த வருடம் மிங்கிளாக இருந்த நான் இப்போது மீண்டும் சிங்கிளாக மாறிவிட்டேன், அதாவது பொண்ணு கிடைத்தால் திருமணம் செய்ய தயார் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகை வரலட்சுமி விஷால் காதல் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இருவரும் நண்பர்கள் என கூறினார்கள். அத்துடன் விஷாலுடன் லக்சுமி மேனனும் கிசுகிசுக்கப் பட்டார். பார்க்கலாம் விஷாலின் வீட்டுக்காரி அடுத்து யார் என்று.!!