“எனக்கு தீவிர உணவு தேவை உள்ளது, பசிக்கிறது உதவுங்களேன்” ஜப்பானில் துடிதுடித்து இறந்த இலங்கை மாணவி.! ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.!!
ஜப்பானில் இறந்த பெண் தொடர்பான செய்திகள் வெளியாகி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் கம்பஹா இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் 33 வயதான விஷ்மி சந்தமாலி. இவர் 2017ம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்றுள்ளார். மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த வருடம் விசா முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து விஷ்மி அங்கு தங்கி இருந்ததால் விசா காலாவதியாகியமையால் ஜப்பான் நகோயா நகர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப் பட்டார்.
தனி அறையில் தடுத்து வைக்கப் பட்டிருந்ததால் மன அழுத்தம் காரணமாக உடல் நிலை மோசமடைய ஆரம்பித்துள்ளது. அத்துடன் தனிமையில் அவர்கள் கொடுக்கும் விருப்பம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாமல் போய் உள்ளது. தனது உடல் நிலை மோசமடைவதாக கூறி தன்னை வைத்திய சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு விஷ்மி குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த போதும் அவரது கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தடுப்பில் உள்ள விஷ்மியை சந்திக்க கடந்த 6ம் திகதி அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் அறையில் விஷ்மி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பெண்ணின் அறையில் இருந்து சில காகித தாள்கள் மீட்கப் பட்டுள்ளது.
அதில் எனக்கு மிகவும் பசிக்கிறது, எனக்கு தீவிர உணவு தேவை உள்ளது, என்னை தற்காலிகமாக சில நாட்கள் விடுவியுங்கள் , நான் நன்றாக சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றும், சில தாள்களில் “எனக்கு உண்மையாகவே சாப்பிட வேண்டிய அவசியம் உள்ளது உதவுங்களேன்” எனவும் எழுதியுள்ளார். தன்னால் இங்கு இருந்து சாப்பிட முடியவில்லை, உணவு குழாய் தொடர்பான நோய் உள்ளது, எனக்கு மருத்துவ சிகிச்சை அவசியம், அனுமதியுங்கள், எனக்கு பசிக்கிறது என எழுதியுள்ளார்.
இவை அனைத்தும் ஜப்பான் ஊடகங்களில் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பசியால் தவித்து இறந்த சந்தமாலியின் மரணத்தை உடனடியாக விசாரணை செய்யுமாறு ஜப்பான் நீதி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் கவனயீனமே சந்தமாலியின் மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிண்றது. தங்கள் நாட்டில் பசியோடு பெண் ஒருவர் இறந்திருப்பது மன வேதனை அளிப்பதாக ஜப்பான் நாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருகிறது.!