மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் காதல் ஜோடி திடீர் மரணம்.!!
மூன்று நாட்களாக வைத்திய சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காதல் ஜோடி சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்த விஷ்ணு மற்றும் க்ரீஸ்மாவே இவ்வாறு மரணமடந்துள்ளனர்.
வெவ்வேறு சாதியை சேர்ந்த இவர்கள் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதன் பின் நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்களது நட்பை ஏற்றுக் கொண்ட பெற்றோர் காதலை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த இருவரும் பெற்றோரின் சம்மதம் இன்றி வாழ முடியாது சாகலாம் என முடிவெடுத்துள்ளனர். அதன் பின் மங்களூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.. இவர்களின் செயற்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டதால் சிலா மணி நேரத்தின் பின் இவர்களின் அறை கதவை ஊழியர்கள் தட்டியுள்ளனர்.
எந்த ஒரு பதிலும் வரவில்லை.என்பதால் கதவை திறந்து பார்த்த போது இருவரும் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர். ஹோட்டல் ஊழியர்கள் வைத்திய சாலையில் சேர்த்த நிலையில் நேற்றைய தினம் ஒருவர் பின் ஒருவராக இருவரும் இறந்துள்ளனர்..!!