பண ஆசை பிடித்த கணவரால் அநியாயமாக மரணமடைந்த அழகிய இளம் பெண்.! அரசின் அதிரடி செயல்.!!
இளம்பெண்கள் மரணம் என்பது கடந்த சில வருடங்களாக இந்தியாவில் அதிகரித்து வருகின்றது, இதற்கான முதல் காரணமாக வரதட்சணை இருக்கிறது. வரதட்சணை வேண்டும் என பிரிந்தவர்களை விட வரதட்சணை போதாது என சண்டையிட்டவர்கள், பிரிந்தவர்கள் மரணித்தவர்கள் தான் அதிகம். அண்மையில் இந்தியாவையே அதிர வைத்த செய்திகளில் ஒன்று விஸ்மயாவின் மரணம்.
விஸ்மயாவை பெற்றோர் கிரண் குமாருக்கு திருமணம் செய்து வைத்ததுடன் 100 சவரண் நகை கோடிகணக்கான சொத்து மற்றும் கார் வரதட்சணையாக கொடுத்திருந்தனர். ஆனால் கார் பிடிக்கவில்லை என்றும் மைலேஜ் சரி இல்லை என்றும் விஸ்மயாவை தொடர்ந்தும் துன்புறுத்தி உள்ளார்.
எதை பேசினால் அடித்து காயப்படுத்தியதால் புகைப்படங்கள் எடுத்து குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு விஸ்மயா தற்கொலை செய்துகொண்டார். விஸ்மயாவின் தற்கொலைக்கு காரணம் கிரண் குமார் தான் என அனைத்து ஆதாரங்களும் சிக்கிய நிலையில் பொலீஸார் அவரை கைது செய்தனர். அத்துடன் கிரண் குமாரின் அரச வேலை நிரந்தரமாக பறிக்கப் பட்டது.
இந்த தற்கொலை தொடர்பில் கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் கருத்து தெரிவிக்கையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும் போது கேரள அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்காது, பெண்களை பாதுகாப்பது எமது கடமைகளில் ஒன்றாகும், பெண்களை வன்கொடுமை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப் படும் என தெரிவித்துள்ளார் .!