“அவர் மீது தான் என் தீராக் காதல்” தன் முதல் காதல் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை வித்யா.!
சைவம் உட்பட ஏராளமான திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வித்யா பிரதீப். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பால் அத்தனை பேரையும் கட்டிப் போடுவதோடு திரைப்படத்தின் வெற்றிக்கும் தனது பங்களிப்பை கொடுத்து விடுவார்.
வித்யா பிரதீப் நடித்த அத்தனை திரைப்பட இயக்குனர்கள் உட்பட உடன் நடித்தவர்கள் வித்தியா பற்றி நல்லவற்றை மட்டுமே பேசி வருகின்றனர். அதாவது தமிழ் திரையுலகில் பலரின் செல்லப் பிள்ளை. இவர் தற்போது இயக்குனர் ஏ, எல் , விஜய் இயக்கத்தில் தலைவி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் அரவிந்த சாமி எம் ஜி ஆர் ஆக நடிக்கிறார். இந்த திரைப்படம் குறித்து பேசியுள்ளார். நான் பாடசாலை செல்லும் நாட்களில் அரவிந்த சாமி சார் அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள்.
சிறு வயதில் இருந்து அவரை மிகவும் பிடிக்கும். அவரை ரசித்திருக்கிறேன். அவரையே திருமணம் செய்து கொள்ளவும் பல முறை நினைத்திருக்கிறேன். தலைவி திரைப்படத்தில் அவரை நேரில் பார்த்த போது அதிர்ந்துபோனேன். அவர் மீதான க்ரஷ் இன்னும் குறையவில்லை. அதே அழகுடன் தான் இருக்கிறார் என புகழ்ந்து தள்ளியுள்ளார்..!