உடல் எடையை இலகுவாக குறைக்க ஆசையா.!? இதை மட்டும் செய்து பாருங்கள் போதும்…!!
சிலருக்கு திடீரென உடல் எடை அதிகரிப்பதுண்டு. குறிப்பாக திருமணமான பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள், ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்கின்ற ஆண்கள் இந்த மாதிரியானவர்களுக்கு திடீரென உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும். அதற்கு என்ன காரணம், அதற்கு செய்ய வேண்டியவை என்னவென்பதைப் பார்க்கலாம்.பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுவதும் கிடையாது.
ஆனால் உடல் எடை கூடிவிட்டதே என பலர் சொல்லக் கேட்டிருப்போம்.சரியாக உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் ஆண்களுக்கு உடல் எடை கூடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு ஏன் உடல் எடை கூடுகிறது ஏன் தெரியுமா? ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம்.சாதாரணமாகவே உடல் எடையை கூட்டுவது எளிது. ஆனால் குறைப்பது மிகவும் குறைவு. அதிக சாப்பாட்டால் அல்லது வேலை அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், உடல் எடை கூடுகிறது என தெரியவந்தால் எப்பாடு பட்டவது முயற்சிக்கலாம்.
சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவை உட்கொள்வது, இரவு நேரங்களில், பீட்சா, பர்கர் போன்ற கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது கூடவே கூல்டிரிங்ஸ் குடிப்பது போன்றவை உடல் எடை அதிகரிக்க காரணம்.உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் செய்ய வேண்டியவை
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், ஒரு நாளைக்கு 1,600 கலோரி உள்ள உணவையும் பெண், 1,200 கலோரி எடை உணவையும் உட்கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைப்பதன் ரகசியம், நாம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது, சரியான அளவில் உட்கொள்ளாமல் இருப்பது நம் உடலின் வளர்சிதை மாற்றங்களைப் பாதித்து உடல் நலத்துக்கு வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.
அதிக அளவில் கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்கு அதிக வைட்டமின், தாது உப்பு மற்றும் நார்ச் சத்துக்கள் கிடைக்கின்றன.வயிறு நிறைந்துவிட்ட உணர்வை மூளை அடைய, குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும். எனவே, அவசர அவசரமாக உணவை எடுத்துக்கொள்ளவேண்டாம். உணவு சாப்பிடும் நேரம் மிக நீண்டதாக இருக்கட்டும்.
எடையைக் குறைக்க நினைப்போர் அடிக்கடி தங்களது உணவில் பசலைக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடலின் வலிமையும் மேம்படும். அதற்கு இந்த கீரையை பச்சையாக சாலட்டுகளில் சேர்த்தோ அல்லது சூப்புகளாக தயாரித்தோ உட்கொள்ளலாம்.