வெயில் காலத்திலும் கூட வறண்ட சருமமா இதையெல்லாம் செய்யுங்க
ஹாய் நட்பூஷ் எல்லாரும் குளிர் காலத்துல தான் தோல் வறட்சி பத்தி புலம்புவாங்க. எனக்கு கோடை காலத்துல கூட இப்படி தான் நு சொல்றவுங்களுக்கு தான் இந்த பதிவு. குளிர்காலத்தில் தோலின் துவாரங்கள் சுருங்கி எண்ணய் சுரப்பிகளின் உற்பத்தி இருக்காது எனவே தோல் வறட்சி ஏற்படுகிறது…வெயில் காலத்தில் வறட்சி பிரச்சனை பலருக்கு இருக்காது…இருந்தாலும் சிலருக்கு இயல்பாகவே வறண்ட தோல் உள்ளவர்களாக இருப்பார்கள்
வறட்சிக்கான காரணம்
பரம்பரை உடல்
• நிறைய பேருக்கு பரம்பரை வியாதி போல் பரம்பரை உடல் வாகு இருக்கும் கருவலையம் தைராய்டு சர்க்கரை புற்றுநோய் இதெல்லாம் பரம்பரை நோய்கள்…
தண்ணிர் பற்றாக்குறை
• தண்ணீர் சரிவர குடிக்காமல் இருந்தாலும் தோல் வறட்சி இருக்கும்….போதிய அளவு நீர் குடியுங்கள்..
உணவில் போதிய சத்து இல்லாமை
• மீன்,மஞ்சள்,முட்டை,கீரை வகைகள்,காய்கறி பழங்கள் எல்லாம் தினமும் தேவையான அளவு எடுத்த்க் கொள்ள வேண்டும்..
பேசக் கூடாது
• பேசக்கூடாது வெறும் பேச்சில்…..என்ன பாட ஆரம்பிச்சிட்டிங்களா….பாடுனது போதும் படிக்க வாங்க…தேவையான உடற்பயிற்சி,தூக்கம் அவசியம்…பெரும்பாலும் ஆஸ்துமா,தோல் நோய் உள்ளவர்கள் அதிகமாக பேசுவார்கள் கவனித்து பாருங்கள்…தோலுக்கும் நுரையீரலுக்க்கும் உயிர்வளி ஆக்ஸிஜன் அவசியம்..இவை இரண்டும் நாம் பேசும்போது ஆக்ஸ்ஜன் பற்றாக்குறை உடலுக்கும் தோலுக்கும் ஏற்படுகிறது…இதனால் தோல் சுருக்கம் மூச்சிரைப்பு வருகிறது…தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க…நீங்க உள்ள எடுத்துக்குற ஆகாரத்த பொறுத்து தான் வெளி தோல் காட்டும்…புற அழகெல்லாம் தற்காலிகம் தான்…
புறத்தில் செய்ய வேண்டியவை;
அடிக்கடி முகத்தை கழுவி கொள்ளுங்கள்..
தயிர் தேய்த்து தடவி கழுவலாம்
தக்காளி.ப்ப்பாளி,வாழைப்பழம் மூன்றும் வறண்ட சருமத்திற்கு அருமருந்து…எனவே இவற்றில் எதாவது ஒன்றை தடவி காய வைத்து கழுவலாம்
பால் தேய்த்து உறவைத்து கழுவலாம்
தேன் உறவைத்து கழுவலாம்
சோற்றுகற்றாழை பிசினை தடவலாம்..(எல்லாத்தையும் ஒரே நாளுல செஞ்சிடாதிங்கப்பா…ஒவ்வொரு நாள் குளிக்கும் முன்னும் ஒவ்வொன்று தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்)
சனி செவ்வாய் கிழமைகளில் எண்ணெய் குளியல் செய்யலாம்… மஞ்சள் தேய்த்து குளிக்கலாம்..
குளிக்கும் நீரில் சோறு வடித்த கஞ்சி கலந்து குளித்தால்நல்ல பலன் தெரியும்…
தூங்கும் முன் தேங்காய் எண்ணெய் முகம் உடம்பு என தேய்த்து கொண்டு தூங்கலாம்…
சோப்பை தவிர்த்து விட்டு கடலை மாவு பாசி பருப்பு மாவு போட்டு குளிக்கலாம்..
பெட்ரோலியம் ஜெல்லி வேஷ்லின் என்ற பெயரில் விற்கப்படுகிறது அது சருமத்தில் அவ்வப்போது தேய்த்து கொள்ளலாம்..
துணுக்கு மூட்டை
மனம் போல் வாழ்வு மாறி தான் முகமும்…ஒவ்வொன்றிற்கும் உணர்ச்சி வசப்படாம மனச கஷ்டப்படுத்தாம திடமா இருங்க உங்கள நீங்க பரபரப்பா வேலை செய்ற ஒரு ஆளா மாத்திக்கிட்டா மனமும் உடலும் ஆரோக்கியமா இருக்கும்…
நன்றி
இப்படிக்கு
(உங்களில் ஒருத்தி)