இயற்கை முறையில் இளநரையை போக்கலாம்..! இதை மட்டும் செய்து பாருங்களேன்..உங்கள் தலைமுடி கறுப்பாகி விடும்..!!
30 வயதை கடந்த பின் தான் நரை வரும் என்பார்கள் ஆனால் பள்ளிக் செல்லும் சிறுவர்கள் முதல் தற்போது இள நரை ஆரம்பித்து விடுகிறது. உடலின் உஷ்ணம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைய உணவு முறைகள் இள நரை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இன்று இள நரையை இலகுவாக எப்படி தீர்க்கலாம் என பார்க்கப் போகின்றோம்.
இதற்கு தேவையான பொருட்கள்: மருதாணி இலைகள், தேயிலை தூள், எலுமிச்சை பாதி. முதலில் மருதாணி இலைகளை நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் சிறிய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து நன்றாக அரை கப் நீர் விட்டு கொதிக்க விடுங்கள்.
அதனுடன் இரண்டு கரண்டி தேயிலை தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். பேஸ்ட் பதத்தில் தேயிலை தூள் வந்ததும் இறக்கி ஆற விடுங்கள். ஆறியதும் அதில் மருதாணி இலை பேஸ்ட் 2 கரண்டி மற்றும் எலுமிச்சை பாதியின் சாறு போன்றவற்றை சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.
நன்றாக மிக்ஸ் ஆனதும் தலை முழுவதும் பூசுங்கள். பின் 30 நிமிடம் வரை அப்படியே விட்டு பின் தலையை கழுவுங்கள். இதனை வாரம் 2 அல்லது மூன்று முறை செய்து வாருங்கள் தலைமுடி இயற்கையாகவே கறுப்பாகி விடும். முக்கிய குறிப்பு: இது குளிர்மை நிறைந்த முறையாகும் ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம்.!